search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி பினு"

    ஜாமீனில் வந்த ரவுடி பினு, அவனது கூட்டாளிகளை கைது செய்த போலீசார் சென்னையில் 256 ரவுடிகளை கைது செய்ய குறி வைத்துள்ளனர். #ParliamentElection #RowdyBinu
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்காக போலீசார் ரவுடிகளை வேட்டையாடி கைது செய்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் தலைமறைவாக உள்ள ரவுடிகளை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் சென்னை எழும்பூரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல ரவுடி பினு கைது செய்யப்பட்டான். தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்திய பினுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதன்பிறகு ஜாமீனில் வந்த பினு நேற்று போலீசாரிடம் சிக்கினான். அவனது கூட்டாளிகள் அக்பர், மனோஜ்குமார் ஆகியோரும் பிடிபட்டனர்.

    பினுவை போன்று சென்னையில் 256 ரவுடிகளுக்கு போலீசார் குறி வைத்துள்ளனர். கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய பிரபலமான ரவுடிகளும் இதில் அடங்குவர். போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து தப்பி ஓடி தலைமறைவாக உள்ள இந்த ரவுடிகள் அனைவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    தேர்தல் நேரத்திலும் ரவுடிகள் அரசியல் கட்சிகளில் சேருவது தொடர் கதையாகி உள்ளது. குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் சமீபகாலமாக அரசியல் கட்சிகளில் இணைந்து செயல்படுவது வாடிக்கையான ஒன்றாகி உள்ளது.

    ரவுடிகள் பலர் முக்கிய கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இப்படி தங்களை பாதுகாப்பதற்காக அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்து முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகித்த ரவுடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

    குறிப்பிட்ட அரசியல் கட்சியில் மாவட்ட செயலாளர்களாக இருந்த 2 ரவுடிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர். கொடுங்கையூரிலும் இதே போன்று ரவுடி கொலை செய்யப்பட்டுள்ளார். #ParliamentElection #RowdyBinu

    ரவுடி பினு பாணியில் அரிவாளால் ‘கேக்’வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அம்பத்தூர்:

    மாங்காடு பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல ரவுடி பினு தனது பிறந்த நாளை பட்டாக்கத்தியால் ‘கேக்’ வெட்டி நண்பர்களுடன் கொண்டாடினார். இதையடுத்து ரவுடி பினு உள்ளிட்ட கூட்டாளிகள் 72 ரவுடிகளை ஒரே நாளில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    இதேபோல் ரவுடி பினு பாணியில் அயனாவரத்தில் வாலிபர் ஒருவர் தனது பிறந்த நாளை அரிவாளால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய வீடியோ காட்சி சமூகவலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இதுபற்றிய விவரம் வருமாறு:-

    ஆவடியை அடுத்த அண்ணனூர் வைஷ்ணவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கார் டிரைவரான இவர் கடந்த மாதம் 17-ந் தேதி, தனது பிறந்த நாளை அயனாவரம், சோலையம்மன் கோவில் மைதானத்தில், நண்பர்களுடன் கொண்டாடினார்.

    அப்போது கிருஷ்ண மூர்த்திக்கு அவரது நண்பர்கள் ஆளுயிர மாலை அணிவித்து, மலர் கிரீடம் வைத்தனர். பின்னர் கிருஷ்ணமூர்த்தி ரவுடி பினு பாணியில் 2 அடி நீள அரிவாளால் கேக்கை வெட்டினார்.

    இதனை அவரது நண்பர்கள் மொபைல் போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலை தளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர்கள் அயனாவரம் வீராசாமி தெருவைச் சேர்ந்த சுனில், நிவாஸ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் மீது ஆயுத தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

    ஜாமீன் கண்டிஷன்படி காவல் நிலையத்தில் ஆஜராகாததால் மீண்டும் கைது செய்யப்பட்ட ரவுடி பினுவை அக்டோபர் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. #RowdyBinu
    திருவள்ளூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிரபல ரவுடி பினு தனது சக கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர்களை போலீசார் சுற்றி வளைத்தபோது பினு உள்ளிட்ட சில ரவுடிகள் தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அம்பத்தூர் துணை ஆணையர் முன்பு பினு சரண் அடைந்தார். சிறையில் அடைக்கப்பட்ட பினு, ஜூன் மாதம் 21-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். மாங்காடு காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கடந்த சில தினங்களாக காவல் நிலையத்திற்கு வரவில்லை. எனவே, அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் அறிக்கை அனுப்பினர்.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் கூட்டாளிகள் 7 பேருடன் பினு பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பினுவையும், கூட்டாளிகளையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.  அப்போது ரவுடி பினு மற்றும் கூட்டாளிகைள அக்டோபர் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும், ஜாமீன் நிபந்தனையை மீறியதால் நீதிமன்றத்தின் மூலம் பினுவின் ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #RowdyBinu
    நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தலைமறைவான ரவுடி பினுவை கும்மிடிப்பூண்டியில் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #Binu #RowdiBinu
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வலம்வந்த பிரபல ரவுடி பினு கடந்த சில வருடங்களாக தலைமறைவாக இருந்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பினுவின் பிறந்தநாளை கொண்டாட அவரது தம்பி மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
     
    இந்த கொண்டாட்டத்தில் நகரத்தின் முக்கிய ரவுடிகள் பலர் பங்கேற்றனர். தகவலறிந்த காவல்துறை அதிரடியாக அங்கு சென்று ரவுடிகளை கைது செய்தனர்.

    ஆனால் அங்கிருந்து பினு உள்ளிட்ட சிலர் மட்டும் தப்பிச் சென்றார். பின்னர் அவர் தாமாக வந்து சரணடைந்தார். பிப்ரவரி 23-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் ரவுடி பினுவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதற்கிடையே, ஜாமினில் வெளியான நாளில் இருந்தே பினு மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவாகி விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தலைமறைவான பிரபல ரவுடி பினு கும்மிடிப்பூண்டியில் கைது செய்யப்பட்டார் 

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்று தலைமறைவான ரவுடி பினு, திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். #Binu #RowdiBinu
    ×